கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி தரப்படும்- பிரதமர் மோடி


கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி தரப்படும்- பிரதமர் மோடி
x
Daily Thanthi 2024-03-04 13:28:03.0
t-max-icont-min-icon

கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி தரப்படும். இது மோடி அரசின் உத்தரவாதம். குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன. ஆனால், நாங்கள் தேசத்தின் எதிர்காலத்தை பற்றி செயல்படுகிறோம். குடும்ப கட்சிகள் ஆட்சி செய்யும் போது லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் இருள் சூழ்ந்து இருந்தது.

இன்று கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே உருவான ஈனுலை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஈனுலை பணி செய்ய தொடங்கும் போது இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தை பெற்றிருக்கும் உலகின் 2-வது நாடாக இந்தியா இருக்கும். இலக்கு பெரியதாக இருக்கும் போது உழைப்பும் பெரியதாக இருக்க வேண்டும். பாரதம் தன்னுடைய மின் சக்தி தேவைகளுக்காக எவ்வளவு பெரிய பணியை செய்ய வேண்டியுள்ளது தெரியுமா? தெலுங்கானாவில் 1,600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்டிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் பல மாநிலங்களில் மின் சக்தி உற்பத்திக்கான ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. நான் இப்போது கூறும் விஷயத்தை கவனமுடன் கேளுங்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜனால் இயங்கும் படகு ஒன்றை தொடங்கி வைத்தேன். பிரதமரின் சூரிய வீடு மின் திட்டம் முழுவதும் உங்களுக்கானது..இலவசமானது. அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம்..உங்களுக்கு லாபம். 

1 More update

Next Story