
சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு அவசர கொள்முதல் அதிகாரம் - மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கடிதம்
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறி இருந்ததாவது:-
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் விரோதத் தாக்குதல்களுக்கு எதிராக சிவில் நிர்வாகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு இயக்குனருக்கு தேவையான அவசர கொள்முதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் நான் (பிரதமர் மோடி) நன்றியுள்ளவனாக இருப்பேன், இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story






