பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான் -... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
x
Daily Thanthi 2025-05-10 06:10:16.0
t-max-icont-min-icon

பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான் - பாதுகாப்புத்துறை குற்றச்சாட்டு


எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது.

பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். முன்னதாக இன்று காலை இந்த தீவிரமான மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் மீண்டும் நிகழும் காட்சியை நாங்கள் கண்டோம்” என்று அவர் தெரிவித்தார். 

1 More update

Next Story