ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம்: தொண்டர்களால்... ... #TVKVijay ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டம்: தவெக தொண்டர்களால் நிரம்பிய மைதானம்
x
Daily Thanthi 2025-12-18 05:31:37.0
t-max-icont-min-icon

ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம்: தொண்டர்களால் நிரம்பிய மைதானம்

கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இதனிடையே பொதுக்கூட மைதானத்தில் பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேச ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது. இதனிடையே விஜய் பொதுக்கூட்டத்தில் பழைய நிபந்தனைகள், இடையூறுகள் இல்லாமல் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story