காவல்துறை அனுமதித்த நேரத்தில் `சரியாக’ மக்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
x
Daily Thanthi 2025-12-18 08:05:18.0
t-max-icont-min-icon

காவல்துறை அனுமதித்த நேரத்தில் `சரியாக’ மக்கள் சந்திப்பை நடத்தி முடித்த விஜய்

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு, செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில் காவல்துறை அனுமதித்த நேரத்தில் `சரியாக’ மக்கள் சந்திப்பை விஜய் நடத்தி முடித்தார். முன்னதாக காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story