
திருப்பரங்குன்றம் விவகாரம்: அது தீபத் தூணே இல்லை - அரசு தரப்பு வாதம்
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் இன்று அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை, முதலில் தீபத் தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை, எனவே அது தீபத் தூணே இல்லை.
நில அளவைத் துறை, வருவாய் துறை ஆய்வு செய்ததில் இது போன்றே பல்வேறு தூண்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, எவ்வித ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





