காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி... வெள்ளி வென்றது இந்தியா


காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி... வெள்ளி வென்றது இந்தியா
x

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோது வருகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கணை பெத் மூனி 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மாவும் (11). ஸ்மிர்தி மந்தனாவும் (6) சிறப்பான தொடக்கத்தை கொடுக்க தவறினர்.

அடுத்து வந்த ஜெமினா- ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆனால் அவர்களால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. ஜெமினா 33 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.


Next Story