பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்


அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த கோதண்ட ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலையில் மோகினி அலங்கார சேவையும், இரவில் கருட வாகன சேவையும் நடைபெற்றது. கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் 6-ம் நாளான இன்று காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன சேவைக்கு முன்னால் கலைஞர்கள் கோலாட்டம், குழு ஆட்டம், பரத நாட்டியம் ஆடினர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். வாகன சேவை நிறைவடைந்தபின் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை அதிகாரி நாகரத்னா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story