திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

வார விடுமுறை என்பதால், அதிகாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால், அதிகாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில், 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை தினங்களில் வழக்கமாக திருவண்ணாமலைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்று அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story