திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் காத்திருப்பு

அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 45 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோரணம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆனது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 45 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் 76 ஆயிரத்து 181 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 874 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 88 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






