திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு


திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு
x

சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

திருப்பதி,

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம் ஆனது.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் முயற்சியால் நேற்று முன்தினம் 90 ஆயிரத்து 211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கும், நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகளில் ஓய்வெடுத்த பக்தர்களுக்கும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மூலமாக அன்னப்பிரசாதம், குடிநீர் வினியோகிக்கப்பட்டன.

இந்த மாதத்தில் 24 நாட்களில் திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கேந்திரத்திலும், திருமலையில் உள்ள மற்ற அன்னப்பிரசாத கேந்திரங்களிலும் 51 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகள், தரிசன வரிசைகள் உள்பட பல்வேறு இடங்களில் 20 லட்சம் பக்தர்களுக்கு பால், டீ, காபி, மோர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டன. மே மாதம் முதல், தினமும் சராசரியாக 2½ லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதமும், 90 ஆயிரம் பக்தர்களுக்கு சிற்றுண்டிகளும், பானங்களும் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story