அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x

அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

அதேவேளை, கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரையடுத்து, அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றா ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story