பிரதமர் மோடி மேற்கொண்ட தேர்தல் பேரணியில் பாதுகாப்பு குறைபாடு; செல்போன் வீசப்பட்டதால் பரபரப்பு...!


பிரதமர் மோடி மேற்கொண்ட தேர்தல் பேரணியில் பாதுகாப்பு குறைபாடு; செல்போன் வீசப்பட்டதால் பரபரப்பு...!
x

பிரதமர் மோடி தேர்தல் பேரணி மேற்கொண்ட நிலையில் அதில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகா தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் மோடி இன்று மைசூரில் பேரணி நடத்தினார். பிரதமர் மோடி தனது வாகனத்தில் இருந்தவாறு பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி வாகனத்தில் இருந்தவாறு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டபோது திடீரென அவர் பயணித்த வாகனம் மீது செல்போன் வீசப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி பயணித்த வாகனம் மீது செல்போன் வீசியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.


Next Story