தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: எவ்வளவு கூடியுள்ளது?


தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: எவ்வளவு கூடியுள்ளது?
x

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, பவுன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, பவுன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது.

4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.65-ம், ஒரு பவுன் ரூ.520-ம் குறைந்து, முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிராம் 1-ம் ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று விலை சற்று குறைந்த நிலையில் இன்று குறையுமா என நகைப்பிரியர்களும் இல்லத்தரசிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக விலை இன்று மீண்டும் உயரத்தொடங்கியது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,980 க்கும், ஒரு சவரன் ரூ.71,840க்கும் விறபனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியிருப்பது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

1 More update

Next Story