ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக அதிரடி உயர்வு

கோப்புப்படம்
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வந்தது. நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.






