காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?


காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 10 Oct 2025 3:31 PM IST (Updated: 10 Oct 2025 3:34 PM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்துள்ளது.

சென்னை

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தொடர்ந்து உயர்ந்து வந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.91 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்வை கண்டது. காலையில் சவரனுக்கு ரூ.120-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிரடியாக குறைந்து ரூ.90,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.90,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.11,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலையில் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி மாலையில் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4,000-ம் அதிகரித்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது.

1 More update

Next Story