கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வயது குழந்தை பலி

மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டில் இருந்த 3 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும் அந்த வீட்டில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





