காஷ்மீர்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 9 பேர் பயணித்தனர். பலார் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி , கார் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





