காஷ்மீர்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி


காஷ்மீர்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி
x

விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 9 பேர் பயணித்தனர். பலார் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி , கார் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story