பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
கோழிக்கோடு,
கோழிக்கோடு அருகே நரிக்குணி பகுதியை சேர்ந்தவர் அசிஸ் (வயது 45). தொழிலாளி. இவர், பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
உடனே சிறுமி சத்தம் போட்டு விட்டு, அங்கிருந்து ஓடினாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அசிஸை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





