வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு


வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 19 May 2025 6:20 AM IST (Updated: 19 May 2025 6:35 PM IST)
t-max-icont-min-icon

அதிகாலை 12.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

வங்கக்கடலில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 19.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.35 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

1 More update

Next Story