இந்தியா ராணுவத்தின் ‘ஆபரேஷன் பிம்பிள்’ நடவடிக்கை - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ராணுவத்தின் ‘ஆபரேஷன் பிம்பிள்’ நடவடிக்கை - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெறுவதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் பிம்பிள் நடவடிக்கையை தொடங்கியது. இதன்படி காஷ்மீரின் குப்வாரா மற்றும் ஜம்முவில் உள்ள கேரன் செக்டார் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஆபரேஷன் பிம்பிள் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com