காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் பிரதமர் மோடியும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





