உ.பி.: பாலத்தில் கார்-லாரி மோதல்; 8 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பால விபத்தில் சிக்கியவர்களில் ஒரு குழந்தை உள்பட 2 பேர் இன்று உயிரிழந்தனர்.
பாராபங்கி,
உத்தர பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றுப்பாலத்தில் தேவா-பதேப்பூர் (காவல் நிலையம்) பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கார் மற்றும் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக கொண்டு சென்றவர்களில் ஒரு குழந்தை உள்பட 2 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. தேவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்திற்கான காரணம் தெரிய வரவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





