கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

தவளக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் போலீசார் தனியார் டீ தூள் கம்பெனி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சத்யராஜ் (வயது 23), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





