கஞ்சா விற்ற 2 பேர் கைது

தட்டாஞ்சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் அருகே 2 பேர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்ற 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 35), பாலாஜி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





