அரசுக்கு ரூ.5.64 கோடி ஈவுத்தொகை


அரசுக்கு ரூ.5.64 கோடி ஈவுத்தொகை
x

காரைக்கால் மின்திறல் வரைநிலை கழகம் சார்பில் லாப ஈவுத்தொகையாக ரூ.5.64 கோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி

காரைக்கால் மின்திறல் வரைநிலை கழகம் சார்பில் லாப ஈவுத்தொகையாக ரூ.5.64 கோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது.

மின்திறல் வரைநிலை கழகம்

காரைக்காலில் மின்திறல் வரைநிலைக்கழகம் 32.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான எரிவாயு கெயில் நிறுவனத்துடன் மேற்கொண்ட உடன்பாட்டின்படி காவிரிப்படுகை நரிமணத்திலுள்ள எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.

இந்த மின்திறல் கழகத்தின் மூலம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டிக்கொண்டுள்ளது. லாபத்தில் 50 சதவீத தொகை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கப்படுகிறது.

ரூ.5.64 கோடி ஈவுத்தொகை

அதன்படி கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான ஈவுத்தொகையாக அரசுக்கு ரூ.5.64 கோடி கிடைத்துள்ளது. இந்த தொகையை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு செயலாளர் முத்தம்மா ஆகியோர் வழங்கினார்கள்.

அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். மின்திறல் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.45.31 கோடி லாப ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story