காரைக்காலில் போராட்டம் நடத்தப்படும்


காரைக்காலில் போராட்டம் நடத்தப்படும்
x

காரைக்கால் வேளாண் கல்லூரியில் கஞ்சா செடி வளர்ப்பு விவகாரம்:குறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

காரைக்கால்

காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகவும், பின்னர் அவை அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சா செடி வளர்ப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, கஞ்சா செடி வளர்த்தவர்கள் மீது புதுவை அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காரைக்கால் மற்றும் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்கால் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். இது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story