அச்சக உரிமையாளர் மீது தாக்குதல்


அச்சக உரிமையாளர் மீது தாக்குதல்
x

மூலக்குளம் அருகே அச்சக உரிமையாளரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்குளம்

அரும்பார்த்தபுரம் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் கிரி (வயது 37). இவர், உருளையன்பேட்டையில் அச்சகம் நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர், தனது உறவினரின் குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கீழ் வீட்டில் வசிக்கும் ஆனந்த சிவராமன், அவரது குடும்பத்தினர் கிரியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story