பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x

புதுவையில் காவல்துறை செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருபுவனை

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒற்றுமை என்ற அமைப்பின் ஒரு அங்கமாக மாணவர்களிடையே காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருபுவனை போலீஸ் நிலையத்தில் நடந்தது. புதுச்சேரி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி உத்தரவின்பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். திருவண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார். முன்னதாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து போலீசாரிடம் தெரிவித்து விளக்கங்களை தெரிந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும், பிரச்சினைகள் ஏற்படும்போது மாணவர்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story