கல்லூரி மாணவி மாயம்
புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம் ஆனார்.
புதுச்சேரி
புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 39). இவரது மகள் விஜயலட்சுமி (19). முத்தியால்பேட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி விஜயலட்சுமியை தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire