தனியார் பள்ளி பஸ் மோதி சமையல் தொழிலாளி பலி


தனியார் பள்ளி பஸ் மோதி சமையல் தொழிலாளி பலி
x

தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி சமையல் தொழிலாளி பலியானார்.மேலும் 2 மாணவிகள் படுகாயமடைந்தனர்.

பாகூர்

தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது 33). சமையல் தொழிலாளி அவரது மனைவி நிவேதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று பொன்னம்பலம் சமையல் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அபிஷேகப்பாக்கம்-டி.என்.பாளையம் ரோட்டில் வந்த போது அவ்வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் ஆனந்தி (16), தரணி (14) ஆகியோரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.

டி.என்.பாளையம் ரோட்டில் வந்தபோது, பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னம்பலம், ஆனந்தி, தரணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் பொன்னம்பலம் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story