குடிபோதையில் ரகளை செய்தவர் கைது


குடிபோதையில் ரகளை செய்தவர் கைது
x

புதுவையில் குடிபோதையில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் திலாசுபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story