மதுகுடித்த நேபாள தொழிலாளி சாவு


மதுகுடித்த நேபாள தொழிலாளி சாவு
x

கோட்டுச்சேரி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த நேபாள தொழிலாளி உயிரிழந்தார்.

கோட்டுச்சேரி

காரைக்கால் கலையன்கட்டி மதகு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 58). கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையில் நேபாளத்தை சேர்ந்த சுனில்குமார் என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் சம்பாதிக்கும் பணத்தில் மதுகுடித்து வந்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் காரைக்கால் சந்தை திடலில் சுனில்குமார் இன்று காலை இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் காரைக்கால் நகர போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story