குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது
லாஸ்பேட்டையில் குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை
புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் நேற்று இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மதுக்கடை முன்பு 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த எழில் (வயது 31), கோட்டக்குப்பத்தை சேர்ந்த சாந்தநாதன் (26) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire