மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் கடலில் அணிவகுப்பு


மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் கடலில் அணிவகுப்பு
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை கடலில் மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடந்தது.

புதுச்சேரி

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை கடலில் மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடந்தது.

மீன்பிடி படகுகள்

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீடுகள்தோறும் 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மீன்பிடி படகுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் இன்று நடந்தது. புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளுடன் வந்திருந்தனர்.

தேசியக்கொடி

அவர்களது படகுகளில் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து அவர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு அணிவகுத்து சென்றனர்.

இந்த அணிவகுப்பினை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த அணிவகுப்பில் புதுவை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story