மலர், காய்கனி கண்காட்சி இன்று தொடங்குகிறது


மலர், காய்கனி கண்காட்சி இன்று தொடங்குகிறது
x

புதுவை ரோடியர் திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மலர், காய் கனி கண்காட்சி நடைபெற உள்ளது.

புதுச்சேரி

புதுவை ரோடியர் திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மலர், காய் கனி கண்காட்சி நடைபெற உள்ளது.

மலர் கண்காட்சி

புதுவையில் வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர், காய்கனி கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ரோடியர் மில் திடலில் தொடங்க உள்ளது.

இதன் தொடக்க விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, வேளாண்துறை செயலாளர் குமார், இயக்குனர் ராமகிருஷ்ணன் என்கிற பாலகாந்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

யானை, டைனோசர்

மலர் கண்காட்சியில் புதுவை அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட 33 ஆயிரம் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் கசேனியா, டைலார்டியா, பொரேனியா, டெர்பினா, ஸ்நாப்டிராகன், செலோசியா, சால்வியா, பெட்டுனியா என புதிய ரக பூஞ்செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக மலர்களால் யானை, டைனோசர், பென்குயின், மாட்டு வண்டி போன்றவைகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது கண்போரை கவரும் விதமாக உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.


Next Story