பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.31 ஆயிரம் மோசடி


பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.31 ஆயிரம் மோசடி
x

புதுவையில் ஆதார் கார்டு, கைரேகை பயன்படுத்தி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.31 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது45). இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி அவரது வங்கி கணக்கில் இருந்து ஆதார் கார்டு, கைரேகை மூலமாக ரூ.1,000 எடுத்தார். இந்தநிலையில் இவரது வங்கி கணக்கில் இருந்து ஆதார் கார்டு, கைரேகையை மோசடியாக பயன்படுத்தி 4 தவணைகளாக ரூ.31 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த சசிகலா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் சசிகலா அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story