ஓட்டல் ஊழியர் தற்கொலை


ஓட்டல் ஊழியர் தற்கொலை
x

புதுவை அருகே மனைவியுடன் ஏற்ப்பட்ட தகராறு:காரணமாக ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்துக்கொண்டார்.

புதுச்சேரி

ராமநாதபுரம் மாவட்டம் கருப்பண்ணன் சந்து பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 57). புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த அவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story