ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் திடீர் சாவு


ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் திடீர் சாவு
x

திருக்கனூர் அருகே ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் திடீரென உயிரிழந்தார்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு காவல்காரன் வீதியைச் சேர்ந்தவர் பெரமன் (வயது 48). இவர் புதுச்சேரி காவல்துறையில் ஐ.ஆர். பி.என். போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, உறவினர்கள் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இறந்து போன பெரமனுக்கு, சசிகலா (31) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

இது குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story