பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல்


பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல்
x

திருபுவனை அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருபுவனை

திருபுவனை அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தலைக்காதல்

திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரை அந்த பகுதியை சேர்ந்த உறவினரான பரசுராமன் (வயது 21) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி பள்ளி செல்லும்போதும், வரும்போதும் பரசுராமன் வழிமறித்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அவர் பரசுராமனை கண்டித்துள்ளார்.

மாணவி கடத்தல்

நேற்று மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மாணவியின் தாயார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பரசுராமன் தங்களது மகளை நண்பர்கள் உதவியுடன் கடத்தி விட்டதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் திருபுவனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்திய பரசுராமன் மற்றும் நண்பர்கள் ஹரிகரன், சிவா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story