நண்பரின் கடையில் நகை திருடியவர் கைது

புதுவையில் நண்பரின் கடையில் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 55). டெய்லர் கடை நடத்தி வருகிறார். அவரது கடையின் மேஜையில் இருந்த 4 கிராம் தங்க கம்மல் மாயமானது. இதுகுறித்து நாராயணசாமி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடையில் இருந்த கம்மலை திருடியது நாராயணசாமியின் நண்பரான பெரியார் நகரை சேர்ந்த இளையராஜா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிராம் கம்மலை மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





