துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்


துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்
x

காரைக்கால் நகராட்சி வளாகத்தில் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

காரைக்கால்

மத்திய அரசின் ஸ்வச்சதா லீக் மற்றும் ஸ்வச்சுதா பக்வாடா என்ற திட்டத்தின் மூலம் 'சுத்தமான காரைக்கால், பசுமையான காரைக்கால்' என்ற தலைப்பில் 15 நாட்கள் கொண்ட சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் நகராட்சியின் எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் ஆகியவை இணைந்து நகராட்சி வளாகத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின. மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி லைத்தார். முகாமில் நகராட்சி ஆணையர் சத்யா, உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சுபாஷ், மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story