மோட்டார் சைக்கிள் திருட்டு
காரைக்காலில் பள்ளிவாசல் வாளகத்ததில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்
காரைக்கால் எஸ்.ஏ.நகரைச் சேர்ந்தவர் சையது சுல்தான் இப்ராஹிம். இவர், காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா பள்ளிவாசலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தொழுகை செய்வதற்காக சென்றார். பள்ளி வாசல் வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். தொழுகை முடிந்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் காணவில்லை. மர்மநபர் யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story