மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

காரைக்கால் அருகே நடைபயிற்சிக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்கால் பச்சூரை சேர்ந்தவர் தியாகராஜன். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளை பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே நிறுத்தி விட்டு நடைபயிற்சி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்துபார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story