உடல் உறுப்புக்கள் தான விழிப்புணர்வு ஊர்வலம்


உடல் உறுப்புக்கள் தான விழிப்புணர்வு ஊர்வலம்
x

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் உடல் உறுப்புக்கள் தான தினத்தை பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தேசிய உடல் உறுப்புக்கள் தான தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புக்கள் மற்றும் திசுக்கள் தானம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குலோத்துங்கன் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தேனாம்பிகை, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் காரைக்கால் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட செவிலியர் கல்லூரி மாணவிகள், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.


Next Story