சிலம்ப பயிற்சியாளர் திடீர் சாவு


சிலம்ப பயிற்சியாளர் திடீர் சாவு
x

தவளக்குப்பம் அருகே சிலம்ப பயிற்சியாளர் திடீர் என உயிரிழந்தார்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த பிள்ளையார்திட்டு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்கிற மோகன்ராஜ் (வயது 38). சிலம்ப பயிற்சியாளர். இவர் குடி பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்த சத்தியராஜ் போதையில் வீட்டில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்தியராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story