புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை- ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை- ரங்கசாமி அறிவிப்பு
x

தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ.12) கொண்டாடப்படுகிறது. மறுநாள் (நவ.13) திங்கட்கிழமை வழக்கம்போல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் சூழல் இருந்தது. தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அவசர அவசரமாக திரும்பவேண்டிய நிலை இருந்தது.

எனவே, வெளியூர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு, தீபாவளி கொண்டாட வெளியூர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி பொது விடுமுறை என அறிவித்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதேபோல் புதுவையிலும் தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி ரங்கசாமி இதனை அறிவித்தார். இதனால் புதுவையில் இருந்து தீபாவளி கொண்டாட வெளியூர் செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story