100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x

திருக்கனூர் அருகே 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருக்கனூர்

புதுவையில் கிராம பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் விநாயகம் பட்டு கிராம மக்கள் 100 நாள் வேலை கேட்டு இன்று காலை அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story