புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

பாகூர் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சோரியாங்குப்பம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கதிரவன் (வயது 54) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story