புதிய சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


புதிய சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x

புதிய சாலை அமைக்க வலியுறுத்தி காரைக்கால்-கும்பகோணம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநள்ளாறு

காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கிராம மக்கள், புதிய சாலை அமைக்க வலியுறுத்தி காரைக்கால்-கும்பகோணம் சாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story